சேலம் அஸ்தம்பட்டி குமரசாமிபட்டி பகுதியில் நடேசன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது.இதில் பிரதாப் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவரது மனைவி பெயர் தேஜ்மண்டல்.இவர்கள் இருவரும் ஒரு வருட காலமாக அங்கு வசித்து வந்துள்ளனர்.தொலைபேசியில் அழைத்ததால் அவர்கள் எடுக்கவில்லை என்பதால் வீட்டின் உரிமையாளர் அவர்கள் குடியிருப்புக்கு சென்ற போது துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த நடேசன் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.அங்கு வந்த
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவின் தாழ்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் பரண் மீது ஒரு சூட்கேஸ் மட்டும் இருந்துள்ளது. மேலும் அதிகபடியான துர் நாற்றமும் வீசியுள்ளது.
அந்த சூட்கேசை திறந்து பார்த்த போது பெண்ணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் அது தேஜ்மண்டல் என்று தெரியவந்துள்ளது.இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : சரிவில் தங்கத்தின் விலை !