கேரளாவில் கோட்டயம் பாலா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் 22 வயதான மாணவி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த செய்தி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி நிதினாவை அபிஷேக் என்ற மாணவன் பேனாவால் குத்தி கொலைசெய்துள்ளான்.கல்லூரி மைதானத்திற்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் இந்த கொலை நடந்ததாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் காதலை ஏற்க மறுத்ததால் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது அவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்து கொலை கல்லூரி உள்ளே நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : பிரபல நடிகருக்கு முதுகெலும்பில் அறுவை சிகிச்சை !