தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர மேற்கு மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நாளை வட உள் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். அடுத்து வரும் செப். 7 முதல் 9ஆம் தேதி வரை வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மிதமாக மழை பெய்யக்கூடும்.