சென்னையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் இந்த வாரத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.