தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பழைய கட்டடங்கள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, திருநெல்வேலி, குமரி, தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.