மீண்டும் வருகிறதா முழு ஊரடங்கு!!!

கரோனா தொற்று முன்பை விட இந்தியாவில் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.அதேநேரம் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று உச்சம் பெற்று வருகிறது. இரண்டாவது அலையின் காரணமாக கேரளாவில் இப்போதும் ஒருநாளைக்கு 7000 பேருக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

இதனால் மத்திய அரசு டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை செய்துவருவதாகவும் செய்திகள் கசிந்தன.

இது குறித்து தற்போது மத்திய அரசு பேசியுள்ளது. அதில், “மீண்டும் ஊரடங்கு என்ற தகவல்கள் வதந்தியே. அப்படி ஒரு எண்ணம் தற்போதை மத்திய அரசிடம் இல்லை. ஊரடங்கு தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை” எனக் கூறியுள்ளது.