Indonesia volcano eruption : இந்தோனேசியாவின் செமேரு எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனேசியாவின் பேரிடர் தணிப்பு அமைப்பின் (BNPB) செய்தித் தொடர்பாளர் எரிமலை வெடிப்பால் கொல்லப்பட்ட 14 பேரில் இருவர் அடையாளம் காணப்பட்டதாகக் கூறினார்.volcano eruption in indonesia
இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட குறைந்தது 98 பேர் காயமடைந்துள்ளனர், அதே நேரத்தில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேருவைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 902 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஜாவாவின் லுமாஜாங் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சிக்கியிருந்த 10 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுமாஜாங்கில் பல கிராமங்கள் சாம்பலால் மூடப்பட்டன. வீடுகள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியதால் கால்நடைகள் அடித்து செல்லப்பட்டன