வாக்குச் சாவடியில் தாக்குல் – மேற்கு வங்கம் !

மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் நான்காவது கட்ட சட்டமன்றத் தேர்தலில் நடந்த கொடூரமான வன்முறையில், கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள சிதல்குச்சி தொகுதியில் உள்ள மாதபங்காவில், மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இறந்தவர்கள் தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் என்று திரிணாமுல் கட்சி தெரிவித்துள்ளது. வாக்குச் சாவடிகளில் குற்றவாளிகள் பெருமளவில் குவிவதைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேலும் வாக்குச் சாவடிகள் சூறையாடப்படும் என்பதால் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். சிஏபிஎஃப் வீரர்கள் மீது குற்றவாளிகள் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் பல வீரர்கள் காயமடைந்தனர் என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.