தேமுதிக விருப்பமனு அறிவிப்பு தேதியை விஜயகாந்த் வெளியிட்டார்

தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளிப்பது தொடர்பான அறிவிப்பை தேமுதிக நிறுவனத்தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் சட்டமன்ற தேர்தல் விருப்பமனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் 25.02.2021 வியாழக்கிழமை முதல் 05.03.2021 வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை விருப்பமனுக்களை பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர் என தெரிவித்துள்ளார்.