கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி !

தமிழகத்தில் கொரோனா தொற்றி இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கள் தொற்று குறைந்து வருகிறது.

மேலும் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக பல பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள் ,நிறுவனங்கள் என பல பேர் நிதிஉதவி வழங்கினார்.

இந்நிலையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.