தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை !

தமிழக முதல்வர் ஸ்டாலின் 22 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் காணொலி முறையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறை உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு குறித்து ஆட்சியர்களிடமும் காவல் கண்காணிப்பாளர்களுடனும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் கேட்டறிவார் எனத் தெரிகிறது.மேலும் மருத்துவத் துறை உயரதிகாரிகளிடமும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறும்.

இந்த சூழலில் 22ஆம் தேதி முதல் மேலும் தளர்வுகள் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.