புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் !

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். நமது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் பண்டிகையாக புத்தாண்டு உள்ளது.

இந்த புத்தாண்டினை நாம் நம்பிக்கையுடனும், புத்துணர்ச்சியுடனும் வரவேற்போம்.2020ஆம் ஆண்டு பெருந்தொற்று மூலமாக நமக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது.

இந்த 2021ஆம் ஆண்டு, நாம் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியாகமாகவும் வாழ்வதை உறுதி செய்வதுடன் அர்த்தமுள்ளதாகவும், அமைதியானதாகவும் இருக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.