இம்முறை புத்தாண்டு கொண்டாட்டம் இப்படி தான் !

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தெலுங்கானா, புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சென்னையில் இன்று இரவு 10 மணியுடன் அனைத்து ஹோட்டல்கள், பார்கள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடவும் அனுமதி இல்லை .

கேரளாவில்புத்தாண்டை கொண்டாட ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து புத்தாண்டு கொண்டாட்டங்களையும் இன்று இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.புதுச்சேரியில் புத்தாண்டு கொண்ட்டாட்டங்களுக்கு பொதுவாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் இருந்து யாரும் வரக் கூடாது என ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டிருக்கிறார்.

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அதிகாலை 1 மணிவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.டெல்லியில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கொரோனா கால இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.