ரெட்கார்டு நீக்கப்பட்டதற்கு வடிவேலு மகிழ்ச்சி

சினிமாவில் நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட்கார்டு தடையை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் இது எனக்கு மறுபிறவி எனவும் நடிகர் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்திற்கு பதிலாக புதிய திரைப்படத்தில் லைகா நிறுவனத்திற்கு நடித்துக் கொடுப்பதாக வடிவேலு ஒப்புக்கொண்டார். இதன் காரணமாக இயக்குனர் ஷங்கர் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றார். இதனால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட பிரச்சனை 4 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. மேலும் விரைவில் நடிகர் வடிவேலு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை தலைநகரம், மருதமலை, படிக்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ் இயக்கவுள்ளார்.