உத்தரகண்ட் முதல்வர் ராஜினாமா !

உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் இன்று ஆளுநர் பேபி ராணி மவுரியாவை ராஜ் பவனில் சந்தித்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். பின்னர் ஊடகங்களிடையே உரையாற்றிய ராவத், உத்தரகண்ட் மக்களுக்கு நான்கு ஆண்டுகளாக சேவை செய்ய ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கிய கட்சிக்கு நன்றி தெரிவித்தார்.

பாஜக சட்டப்பேரவை கட்சி கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்று ராவத் தெரிவித்தார். அப்போது புதிய முதல்வர் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ராஜினாமா செய்ததன் காரணம் குறித்து நிருபர்கள் ராவத்திடம் கேட்டபோது, இது கட்சியின் முடிவு என்று தெரிவித்தார்.