உயரும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் !

தமிழகத்தில் 14 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநர் பவன் குமார் கூறுகையில், ஆண்டுதோறும் ஒப்பந்தப்படி இந்தக் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.மேலும் இதுகுறித்து முழுமையான விவரம் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

திருச்சி-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடி,தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை சுங்கச்சாவடி,கள்திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி உள்ளிட்ட 14 சுங்கச்சாவடிகளில் இந்தக் கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலைத் துறை அமலுக்கு கொண்டுவரும்.