மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கரோனா தொற்று !

கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் அதிகம் பரவி வருகிறது.

தற்போது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார்.

எனக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2-3 நாட்களில் என்னடன் தொடர்பு கொண்ட அனைவருமே தயவுசெய்து தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றுகூறியுள்ளார்.