50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி விரைவில் போடப்படும்- ஹர்ஷவர்தன்

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 7 நாட்களில் 188 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் இல்லை. அதேநேரம் 21 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை.

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை மற்றும் செயல் திறன் மிக்கவை. இது தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.