கொரோனா தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் தொடங்கியது..!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான ஒத்திகை 2ம் கட்டமாக தொடங்கியது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடக்கும் ஒத்திகையை மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. ஏற்கனவே 5 மாவட்டங்களில் நடந்தநிலையில் அனைத்து மாவட்டங்களிலும் தலா 5 இடங்களில் இன்று ஒத்திகை நடைபெறுகிறது.

நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் 20% பேருக்கு அதாவது 1.6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.