வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

திமுக சட்டத் துறை சார்பில் மாநாடு மற்றும் சட்டக் கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்த மாநாட்டை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். அப்போது பேசிய அவர், ‘வாழ்த்துரை வழங்கவில்லை.

உங்களிடம் வாழ்த்துக்களை பெற இங்கு வந்துள்ளேன். பிரச்சாரத்திற்கு போகும் இடமெல்லாம் நான் பல்வேறு பொய்யான அவதூறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறேன். சட்டதுறை என்னை காப்பாற்றும் என நம்பி தான் நான் பல இடங்களில் சவால் விட்டு வருகிறேன்.

பெண்களை நான் புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. அதற்கு மன்னிப்பு கோர முடியாது. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பெண்களின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். கருணாநிதியும் எனது தந்தை மு.க.ஸ்டாலினும் என்னை அவ்வாறு வளர்க்கவில்லை.