பொங்கல் பண்டிகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் நடைபெறும்

பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் புதுக்கோட்டையில் நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-


அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு கூட்டணியில் ஏற்றுக்கொள்ளவில்லை என நாங்கள் யாரும் சொல்லவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் உரிய முறைப்படி தலைமை தான் முடிவு செய்து பதில் சொல்வார்கள்.

பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தமிழக அரசியலில் மாற்றம் இருக்கும். கூட்டணிகள் முடிவாகி அறிவிப்பார்கள். சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது எனக்கு தெரியாது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும். ரஜினிகாந்தை அரசியலுக்கு வர பா.ஜ.க. தான் நிர்பந்தம் செய்தது என்பதை வேறு யாரும் சொல்லக்கூடாது. அவர் தான் கூற வேண்டும்.