ரஜினி ஸ்டைலில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !

சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் பாக முகவர்கள் BLA-2 கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று முகவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அளித்தார். அப்போது மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், திருக்குவளையில் பிரச்சாரத்தை துவக்கிய நாளிலேயே கைது செய்யபட்டேன் எனவும், பிரச்சாரத்துக்காக கைது செய்யப்பட்டபோது மறைந்த கருணாநிதி இருந்திருந்தால் பெருமைப் பட்டிருப்பார் என்றும் கூறினார்.

தொடர் கைதால் தனது பிரச்சாரம் பெரிய எழுச்சி பெற்றதாகவும், தன்னுடைய பிரசாரத்திற்கு மிகப்பெரிய விளம்பரத்தை ஏற்படுத்தி தந்த முதல்வருக்கும், அதிமுக அரசிற்கும் மிகப்பெரிய நன்றி எனவு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், நான் வந்ததற்கே எழுச்சி என்றால், திமுக தலைவர் வந்தால் என்ன ஆகும்? நான் வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சர் தலைவர் ஸ்டாலின் தான். ஆட்சி மாற்றம் வரப்போகிறது,திமுகதான் ஆட்சி அமைக்கப்போகிறது எனத் தெரிவித்தார்.