பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் 2.5கிலோ தங்கம் மாயம்

பெங்களூரு கெம்பேகவுடா பன்னாட்டு விமான நிலையத்தில் ஜப்தி செய்து வைக்கப்பட்டிருந்த இரண்டரை கிலோ தங்கம் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கஷ்டம் துறைச் சேர்ந்த மூத்த அதிகாரி சேத்தன் என்பவர் 6 பேர் மீது புகார் அளித்துள்ளார். 2012 முதல் 2014 வரை இரண்டு கிலோ 594 கிராம் தங்க நகைகளை அப்போது பறிமுதல் செய்யப்பட்டு விமான நிலையத்தில் இருந்த கார்கோ குடோனில் வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது அதில் இரண்டரை கிலோ தங்க நகைகளை காணவில்லை தெரியவந்துள்ளது இதையடுத்து கஸ்டம்ஸ் துறையைச் சேர்ந்த வினோத் சின்னப்பா கேசவன் ராஜசேகர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.