நடிகர் வேணு அரவிந்த் நினைவு திரும்பினார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் இருந்த நடிகர் வேணு அரவிந்த், தற்போது நினைவு திரும்பியுள்ளார்.

முத்து எங்கள் சொத்து படம் வாயிலாக, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் வேணு அரவிந்த், 56. அலைபாயுதே, நரசிம்மா, வல்லவன், வேகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வந்த இவர், ‘அலைகள், காசளவு நேசம், வாழ்க்கை’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

இவருக்கு, சில வாரங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நிமோனியா பாதிப்பால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட வேணுவுக்கு, மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதற்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தற்போது, அவர் எதிர்பாராத விதமாக, கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்ற செய்தி பரவியது. ‘கோமாவில் மீண்டு விட்டார். நினைவு திரும்பியுள்ளது’ என, அவர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.