மக்கள் சுயமாக சம்பாதிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்- டிடிவி தினகரன்

இலவசங்களை கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றுவதை விட , அவர்களே சுயமாக சம்பாதிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், இன்று வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளார்.

அதற்காக நேற்று கோவில்பட்டிக்கு வந்த டி.டி.வி.தினகரன் செண்பகவல்லியம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னமான குக்கரை வைத்து சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது.