விவசாயிகளின் போராட்டம் தொடர்வதால் கோடிக்கணக்கில் இழப்பு

தேசிய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் வணிகர்கள் 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர் என அகில இந்திய வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கந்தேல்வால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “டெல்லியில் தற்போதைக்கு பற்றாக்குறை இல்லை. ஆனால், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தால், அடுத்த 15 முதல் 20 நாள்களில் இன்னலை சந்திக்க நேரிடும். விடுமுறை கால உச்ச நீதிமன்ற அமர்வு இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து தீர்ப்பை உடனடியாக வழக்கும். அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது” என்றார்.