டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் ஷரத் குமார் !

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில், தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மற்றொரு இந்தியரான சரத்குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதுவரை இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளது.

2015 ரியோ ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் (D63) பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டின் தங்கவேலு இந்த முறை வெள்ளி வென்றுள்ளார்.ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டிகள் இன்று நடைபெற்றன. இந்தியா சார்பில் தங்கவேலு, சரத்குமார், வருண் பட்டி மற்றும் அமெரிக்காவின் சாம் கிரீவ் உட்பட 7 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறந்த உயரத்தை அடைய 3 வாய்ப்புகள் வழங்கப்படும்.இதில் மாரியப்பன் மற்றும் சரத்குமார் இருவரும் 1.73 மீட்டர் உயரத்துடன் அடுத்த கட்டத்திற்கு சென்றனர், ஆனால் வருண் வாய்ப்பை இழந்தார்.

தங்கவேலு 3 வது முயற்சியை தாண்டி சாதனையை முறியடித்தார். இருப்பினும், சரத்குமார் தனது 3 வது முயற்சியை கடக்க தவறி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.