இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம் !

இந்தியாவின் பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பட்டேல் டோக்யோ பாராலிம்பிக் இறுதி போட்டியில் இந்தியாவின் பவினா பென் பட்டேல் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸில் அரையிறுதிப் போட்டி கிளாஸ் 4 பிரிவில் இந்தியாவின் பவினாபென் ஹஸ்முக்பாய் படேல் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

பவினா படேல் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் ஜாங்க் மியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார் பவினா.இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் பவினா பட்டேல் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.