டோக்கியோ ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து !

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகின்றன.மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் பி.வி. சிந்து.

இதில் 7வது நாளான இன்று டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து. டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் 16 வது சுற்றில் பி.வி.சிந்து டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை 21-15, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

மேலும் சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் பி.வி. சிந்து 7ஆவது இடத்திலும் மற்றும் மியா பிளிச்ஃபெல்ட் 12ஆவது இடத்திலும் உள்ளனர்.