ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முன்பதிவு தொடக்கம் !

பொங்கல் பண்டிகை வரும் இந்த நேரத்தில் நம் அனைவரது நினைவில் வருவது நம் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தான்.தற்போது
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிகட்டில் பங்கேற்க உள்ள காளைகளின் உரிமையாளர்கள் இன்று பதிவு செய்து அதற்கான டோக்கன்களை பெற்று வருகின்றனர்.

காலை 8 மணிக்கு இந்த பணி தொடங்கியுள்ளது. அத்துடன், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடைபெற்று வருகின்றது.அவனியாபுரத்தில் வருகிற 14-ஆம் தேதியும், பாலமேட்டில் 15-ஆம் தேதியும், அலங்காநல்லுரில் 16-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 50 சதவீத பார்வையாளர்கள் மற்றும் 300 மாடுபிடிவீரர்கள் மட்டுமே இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.