கரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தொட்டது – தமிழகம் !

கரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது.மேலும் தமிழகத்தில் இதை தடுக்க கரோனா கால நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி வருகின்றனர்.முகக்கவசம் அணிவது மிகவும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2089 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1241 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் 8,77,279 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று கரோனா தொற்று புதிய உச்சமாக இரண்டாயிரத்தை கடந்தது.