தேசிய மருத்துவர் தினம்..!

உலகம் முழுவதும் மருத்துவர்களை கெளரவிக்கும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. ஏனெனில் மருத்துவர்கள் நமது வாழ்வில் மிகவும் முக்கியமானவர்கள். மேலும் இந்த கொரோனா தொற்று காலத்தில் அவர்களுடைய பங்கு மிகவும் முக்கியமானது. ஜூலை 1 ஆம் தேதியானது இந்தியாவில் தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

மருத்துவர்களை நாம் கெளரவிப்பதற்கான ஒரு நாளாக இந்த நாள் உள்ளது. இந்தியாவில் சிறந்த மருத்துவராக இருந்தவர்தான் டாக்டர் பிதான் சந்திர ராய். மேலும் இவர் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வராகவும் இருந்தவர்.

மருத்துவ துறையில் அவர் செய்த மகத்தான அர்பணிப்பையும் பங்களிப்பையும் போற்றும் விதமாக அவருடைய பிறந்த நாளான ஜூலை 1 ஆம் தேதியானது இந்தியாவின் தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது.