கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

கேரள மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,26,028 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், புதிதாக 28,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று 142 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,170 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கேரளாவில் இன்று ஒரே நாளில் 45,400 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் கேரளாவில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,25,319 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது தற்போது 2,89,283 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.