covid cases in tn :தமிழகத்தில் இன்று 10,978 பேருக்கு கொரோனா !

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

covid cases in tn : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 10,978 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,39,253.

சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,098.இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 10 பேர் உயிரிழந்தனர்.இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.covid cases in tn

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நாளில் திருமணம் போன்ற விழாக்களுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து தற்போது வீடுகளுக்கு உணவு விநியோகிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிங்க : national news : பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக சோதனை செய்த தலைமை ஆசிரியர் !