தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 1,908 பேருக்குக் தொற்று உறுதியாகியுள்ளது.மேலும் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,65,452. ஆக உள்ளது.சென்னையில் இன்று 203 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,11,076.ஆக உள்ளது.இன்று கொரோனா தொற்றினால் 29 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,159 ஆக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.