மகனாக வந்த தந்தை முத்தமிட்டு மகிழ்ந்த சிவகார்த்திகேயன் !

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நம்ம வீட்டு பிள்ளையாக இருப்பவர்.விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் காமெடி கலைஞராகப் பங்கேற்றார்.தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இவரது மிமிக்ரி மற்றும் காமெடி மூலம் ரசிகர் மனதில் இடம்பிடித்தவர்.அதன் பிறகு தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்தில் கதாநாயகனான நடித்தார்.

அடுத்தடுத்து எதிர் நீச்சல்,மான் கராத்தே,வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் மூலம் தனக்கென்று ஒரு இடம் பிடித்தார்.காக்கி சட்டை, ரொமோ, வேலைக்காரன், கனா பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.

சிவகார்த்திகேயன் மனைவி பெயர் ஆர்த்தி.இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் இருக்கும் நிலையில் கடந்த ஜூலை 12ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது.18 வருடங்களுக்கு பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என்று தன் மகனை கூறினார்.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் அன்போடும் ஆசியோடும் குகன் தாஸ் என பெயர் சூட்டியிருக்கிறோம் என்று கூறி குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.