தமிழகத்தில் இன்று 1,531 பேருக்கு கொரோனா பாதிப்பு !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 68 ஆயிரத்து 495 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தற்போது 1926 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,59,883 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 15 ஆயிரத்து 873 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 35,650 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : நடிகை சமந்தா மறுத்த ரூ.200 கோடி ஜீவனாம்சம் !