பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

சென்னை கேகே நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் ஆசிரியராக உள்ள ராஜகோபால் மீது பாலியல் புகார்கள் எழுந்தன.இவர் படிக்கும் மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்கள் எழுந்தன.

இந்த புகாரின் அடிப்படையில் கடந்த மே 24ஆம் தேதி ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.போக்சோ பிரிவு உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தற்போது 7 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் வாக்குமூலம் பெறப்பட்டுக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழகத்தில் இன்று 1,531 பேருக்கு கொரோனா பாதிப்பு !