இன்று 34,285 பேருக்கு கொரோனா உறுதி

சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 71,866 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 34,285 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 5 பேர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள், 34,280 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,11,496 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,66,41,632 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 19,272 பேர் ஆண்கள், 15,013 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 11,32,479 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 7,78,979 ஆகவும் அதிகரித்து உள்ளது. 28,745பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,83,504 ஆக உயர்ந்தது.

468 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 178 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 290 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,340 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.