நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு ..பீதியில் மக்கள் !

தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சுகாரதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 5441 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 9,20,827 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் 473 பேருக்கும் செங்கல்பட்டில் 465 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.