அடுத்த மாதம் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க உத்தேசம் !

holiday-for-schools-and-colleges-in-erode
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் பஞ்சாப்,கர்நாடகா போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியானது.

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.தற்போது செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனா தொற்று இருப்பதால் 50 சதவீத மாணவர்களுடன் நெறிமுறைகளை பின்பற்றி துவங்கலாம் என்று தெரிகிறது.

எனவே பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.