மிரட்டும் கரோனா விழிபிதுங்கும் தமிழகம் !

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.வரும் திங்கள்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரேநாளில் 14842 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாகாக 4086 பேருக்கும் செங்கல்பட்டில் 1163 பேருக்கும் கோவையில் 1004 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் கரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,66,329 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 1,00,668பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி 80 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த கொரோனா உயிரிழப்பு 13,475 ஆக அதிகரித்துள்ளது.