tn news : மக்கள் கவனத்திற்கு..நாளை விடுமுறை கிடையாது !

tn news : மக்கள் கவனத்திற்கு..நாளை விடுமுறை கிடையாது !
tn news : மக்கள் கவனத்திற்கு..நாளை விடுமுறை கிடையாது !

tn news: தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.தற்போது இந்த மூன்றாம் அலையில் பரவலை தடுக்க வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில்,இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், ரேஷன் கடைகள் வழக்கம் போல் நாளை செயல்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

மேலும் நாளை நியாய விலை கடை வேலை நாள் என்பதால் இதற்கு பதிலாக பிப்ரவரி 26 ஆம் தேதி நியாய விலை கடைகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.