Minister M P Saminathan tests covid positive : கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருப்பவர் மு.பெ.சாமிநாதன். இவருக்கு லேசான அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று து.உறுதியாகியுள்ளது . இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.Minister M P Saminathan tests covid positive
இந்த இரண்டாம் அலையில் தமிழகத்திற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
இதையும் படிங்க : Omicron in tamilnadu : தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு !
புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் மாறுபாட்டைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.பல ஐரோப்பிய நாடுகள் மிகவும் தொற்றுநோயான புதிய கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்துள்ளன.
ஓமிக்ரான் கோவிட்-19 மாறுபாடு, கொரோனா வைரஸின் மிக மோசமான ஒன்று என்று தெரிவித்துள்ளனர்.இது தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்று தெரிவித்துள்ளனர்.COVID-19 இன் பீட்டா மாறுபாட்டில் காணப்படும் தடுப்பூசி-எதிர்ப்பு மாற்றங்களையும் Omicron மாறுபாடு உள்ளடக்கியது.
ஒமைக்ரான் திரிபு தற்போது 38 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக தடுப்பூசிகள் செலுத்தி வருகின்றனர்.
நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இது தான் தமிழகத்தின் முதல் ஒமைக்ரான் பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருடன் வந்த குடும்ப நபர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.16 வயது குழந்தை உட்பட அந்த 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எல்லோருக்குமே சிறிய அளவிலான பாதிப்பு மட்டுமே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.