தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா !

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவியது.இதனை தடுக்க அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமலில் வைத்துள்ளது.

தற்போது உள்ள ஊரடங்கு 4 ம் தேதி முடியும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற செய்தி எழுந்துள்ளது.மேலும் ஊரடங்கை நீட்டிப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வல்லுனர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தொற்று எண்ணிக்கை குறித்தும் ஊரடங்கில் வரும் தளர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.தற்போது மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அமலில் உள்ளது.

தற்போது கொரோனா குறைவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.