தமிழகத்தில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு !

mega sport city
விளையாட்டு வீரர்களுக்காக மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் குறைந்த தொற்று எண்ணிக்கை மீண்டும் ஏற தொடங்கியது.

தமிழகத்தில் திருவிழாக்கள் அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை உள்ளது.மேலும் இதை தடை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் 3 ம் அலை அக்டோபர் மாதம் வரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.அதனால் இந்த பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பண்டிகைகளை தங்களது இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பொது போக்குவரத்தை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும், கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.