தமிழகத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் நிபந்தனைகளுடன் கூடிய தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 31 ம் தேதி வரை அமலில் உள்ளது. தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (30ம் தேதி) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் இன்றி ஊரடங்கை ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எவ்வித மாற்றமின்றி தொடரும்.

அரசின் விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.