அரசு ஊழியர்கள் கவனத்திற்கு..வாரம் 2 நாள் கைத்தறி ஆடை !

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.மேலும் மக்களுக்கு பயன்படக்கூடிய நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர்துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது அவர், அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டுமுறை கைத்தறி ஆடையை உடுத்த வேண்டும்.

அனைத்து வயதினருக்கும் ஏற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைக்க வேண்டும். கைத்தறியை உயர் வருவாய் பிரிவினரிடம் கொண்டு சென்று நெசவாளர்களின் வருவாயை உயர்த்திட வேண்டும் என சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.