அரசு ஊழியர்களுக்கு அடுத்த அறிவிப்பு !

mega sport city
விளையாட்டு வீரர்களுக்காக மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இதில் திமுக வெற்றிபெற்று ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனார் .மேலும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.

தற்போது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.2022 ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.

சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது உச்சவரம்பு அதிகரிக்கப்படுகிறது. அதாவது, 58ஆக இருக்கும் ஓய்வு வயது 60ஆக உயர்த்தப்படுகிறது.அரசு பணியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்களின் பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.