வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யலாம்

நாளை முதல் முழு ஊரடங்கு அமலாவதால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, காய்கறி மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காய்கறி மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள 044-22253884 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.